பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

யாஷிகாவின் ‘படிக்காத பக்கங்கள்’ டீசர் அப்டேட்!

நடிகை யாஷிகா ஆனந்த்தின் படிக்காத பக்கங்கள் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Published On :

பிக் பாஸ் தொலைக்காட்சி மூலமாகப் பிரபலமான நடிகை யாஷிகா, சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தேவர்கொண்டாவின் நோட்டா, ஜாம்பி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றன.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்ற யாஷிகாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதிலிருந்து மீண்டு வந்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டு மட்டும் யாஷிகா நடிப்பில் பஹீரா, சைத்ரா, சில நொடிகள், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ஆகிய 4 படங்கள் வெளியானது.

தற்போதும் 4 படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் செல்வம் மதப்பன் இயக்கத்தில் படிக்காத பக்கங்கள் எனும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ப்ரஜின் நாயகனாக நடித்துள்ளார்.

Story image

எஸ் மூவி பார்க், பௌர்ணமி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் மார்ச் 24ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.