’மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் பிரவீன் குமார் (28). இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர்.
இவர் இசையில் மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடல் கவனம் பெற்றது.
சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால், பிரவீன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறுகிறது.