‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இளம் திரைப்பட இசையமைப்பாளர் பிரவீன் குமார் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

’மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் பிரவீன் குமார் (28). இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர்.

இவர் இசையில் மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடல் கவனம் பெற்றது.

சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால், பிரவீன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com