

’மேதகு’, ‘ராக்கதன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் பிரவீன் குமார் (28). இவர், திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது நண்பர்களின் குறும்படங்களுக்கு இசையமைத்தவர்.
இவர் இசையில் மேதகு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ பாடல் கவனம் பெற்றது.
சில படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால், பிரவீன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இறுதி ஊர்வலம் அவரது சொந்த ஊரான தஞ்சாவூரில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.