இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்
விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று ரஜினிகாந்த் உருக்கம்.


மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருது வழங்கியதற்கு நடிகர் ரஜினிகாந்த் வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு உயிரிழந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருதை மே 9-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
இந்த விருதினை விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், விஜயகாந்துக்கு விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ரஜினி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் பேசியதாவது:
“விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை மத்திய அரசு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. பத்ம விருதுகள் வரலாற்றில் அவரது பெயரை சேர்த்துள்ளது அவருக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கிறது.
விஜயகாந்த் நம்முடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. திடீரென தோன்றி பல சாதனைகளை செய்து மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த்தை போன்று ஒருவரை பார்க்கவே முடியாது. மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டனின் பெயர் வாழ்க.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...