நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

3-வது பிளாக்பஸ்டர்... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் வசூல்!

லக்கி பாஸ்கர் வசூல் அறிவிப்பு...

News image
Updated On :4 நவம்பர் 2024, 2:58 pm IST

நடிகர் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் லக்கி பாஸ்கர். தீபாவளி வெளியீடாக அக். 31 வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமான, சென்னையில் படம் வெளியான முதல் நாளைவிட தற்போது கூடுதலாகக் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. பிரதர் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அப்படத்தின் திரைகளை அமரனும் லக்கி பாஸ்கரும் நிரப்பும் எனத் தெரிகிறது.

Story image

இந்த நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி உலகளவில் ரூ. 55.4 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தெலுங்கில், மகாநதி, சீதா ராமம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்த துல்கர் சல்மான், லக்கி பாஸ்கர் மூலம் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.