புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிக் பாஸ் 8: மஞ்சரிக்கு மகனின் நினைவுகளைத் தூண்டிய விஜய் பாடல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமாரிடம் தனது மகனின் நினைவுகளை பகிந்துள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி.

News image

மஞ்சரி, ஜாக்குலின்

படம் | எக்ஸ்

Updated On :14 நவம்பர் 2024, 10:26 am

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமாரிடம் தனது மகனின் நினைவுகளை பகிந்துள்ளார் பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி.

வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பேரில் சிவாஜி பேரன் சிவக்குமார் மற்றும் மஞ்சரியும் அடங்குவர்.

மஞ்சரி பட்டிமன்ற பேச்சாளர் என்பதால், பிக் பாஸ் வீட்டில் உள்ள முத்துக்குமரனுக்கு போட்டியாக பெண்கள் அணியில் இடம்பெற்ற வலுவான போட்டியாளர் என்பதே ரசிகர்கள் கருத்தாக உள்ளது.

ஆர்.ஜே. ஆனந்தி புத்திசாலித்தனமாக விளையாடினாலும், பேசுவதைத் தெளிவாகவும் பெண்கள் அணியின் கருத்துகளை வெளிப்படையாகவும் முன்வைப்பதில் மஞ்சரி சிறந்த போட்டியாளராகவே பார்க்கப்படுகிறார்.

மகன் குறித்து உருக்கம்

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாள் காலையும் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு நாள் தொடங்கும். அந்தவகையில் இன்று தெறி படத்தில் இடம்பெற்ற ஈனா மீனா டேக்கா என்ற பாடல் ஒலிபரப்பப்பட்டது.

இதில் மகளின் சேட்டைகளைப் பொறுத்துக்கொள்ளும் தந்தையாக விஜய்யும், சுட்டித்தனங்கள் நிறைந்த குழந்தையாக நைனிகாவும் நடித்திருப்பர். இதனால் இந்தப் பாடல் பலருக்கும் விருப்பமான பாடல் எனலாம்.

ஒவ்வொரு நாளும் தெறி படத்தின் இந்தப் பாடலை தனது மகனுடன் சேர்ந்து பார்ப்பது வழக்கம் என்றும், இதில் வரும் சுட்டித்தனங்கள் எல்லாவற்றையும் அவனும் செய்வான் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் தனது மகனின் சேட்டைகளை விடியோ எடுத்துவைத்து இந்தப் பாடலை வைத்தே எடிட் செய்வது தனது வழக்கமான பணிகளில் ஒன்று என்றும் கூறுகிறார்.

இந்தப் பாடலைக் கேட்டதும் எனது மகனின் நினைவு வந்துவிட்டதாகவும், குறிப்பிடுகிறார். இப்பாடலில் இடம்பெற்ற வரிகளையும் சுட்டிக்காட்டிப் பேசுகிறார்.

மகனின் நினைவில் உணர்ச்சிவயப்பட்டிருப்பதால், மஞ்சரிக்கு ஆறுதலாக அவரின் அருகிலேயே சிவக்குமார் நிற்கிறார்.

ஒவ்வொரு நாளும் உற்சாகமாக நாள் தொடங்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடல் ஒலிபரப்பப்படும். ஆனால், வீட்டை விட்டுவிட்டு வந்துள்ளதால், போட்டியாளர்களுக்கு சில பாடல்கள் உணர்வுப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.