16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இயக்குநரான ஷாருக்கான் மகன்..! நெட்பிளிக்ஸில் ரிலீஸ்!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

ஷாருக்கான், ஆர்யன் கான்.

Published On :

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (27) இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நாயகராக அறிமுகமாகுவர் என நினைத்திருந்த வேளையில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிப்பில் ஆர்யன் கான் புதிய இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் 2025இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷாருக்கான் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அதில், "புதிய கதை சொல்லல்முறை. கட்டுப்படுத்தப்பட்ட ஒழுங்கின்மை, தைரியமான காட்சிகள், அதிகமான நகைச்சுவைகளும் உணர்ச்சிகளும் கொண்டது. மக்களை மகிழ்வித்து மகிழ் ஆர்யன் கான். சினிமா போல மிகச் சிறந்த வியாபாரம் எதுவும் இல்லை" என்றார்.

இந்தப் படத்துடன் ரெட் சில்லிஸ் - நெட்பிளிக்ஸ் உடன் 6ஆவது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பாக டார்லிங்ஸ், பக்‌ஷக், கிளாஸ் ஆஃப் 83, பேட்டல், பார்ட் ஆஃப் பிளட் ஆகிய படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.

இதற்கு முன்பாக ஆர்யன் கானின் சகோதரி சுஹானா கான் ஜோயா அக்தர் இயக்கிய தி ஆர்சிஸ் எனும் படத்தின் மூலம் நெட்பிளிக்ஸில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.