16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஷாருக்கான் மகனின் இணையத் தொடருக்கு இசையமைக்கும் அனிருத்!

ஷாருக்கான் மகன் இயக்கும் இணையத் தொடருக்கு இசையமைக்கும் அனிருத்.

ஷாருக்கான் மகனின் இணையத் தொடருக்கு இசையமைக்கும் அனிருத்

Published On :

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இயக்கும் இணையத் தொடருக்கு அனிருத் ரவிசந்தர் இசையமைக்கவுள்ளார்.

நாயகராக அறிமுகமாகுவர் என நினைத்திருந்த ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், இணையத் தொடரை இயக்கவுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியானது.

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக கௌரி கான் தயாரிப்பில் ஆர்யன் கான் புதிய இணையத் தொடரை இயக்கியுள்ளார்.

இந்தத் தொடர் நெட்பிளிக்ஸில் 2025இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன் கான் படத்தின் அறிவிப்பை ஷாருக்கான் வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிவிப்பை பகிர்ந்து தயாராக இருங்கள் என்று அனிருத் பதிவிட்டுள்ளார்.

இதன்மூலம், ஆர்யன் கான் படத்துக்கு அனிருத் இசையமைப்பது உறுதி ஆகியுள்ளது. ஏற்கெனவே, ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அனிருத் அறிமுகமாகி இருந்தார்.

ஆர்யன் கான் சர்ச்சை

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை கடந்த 2021ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கு விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.