ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புஷ்பா - 2 இறுதி நாள் படப்பிடிப்பு! உருக்கமாக பதிவிட்ட அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா!

புஷ்பா - 2 படப்பிடிப்பு நிறைவு...

News image
Updated On :27 நவம்பர் 2024, 9:53 am

DIN

புஷ்பா - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 திரைப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட உள்ளனர். படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது.

பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் டிரைலர் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.

படத்தின் புரமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், திங்கள்கிழமை (நவ. 25) படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இறுதி நாளில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா கலந்துகொண்ட பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

Story image

படப்பிடிப்பு முடிந்ததைக் குறிப்பிடும் விதமாக அல்லு அர்ஜுன், “புஷ்பாவுடனான 5 அண்டுகள் பயணம் முடிந்தது. என்னவொரு பயணம்..” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல், ரஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் பெரிய குறிப்பையே பகிர்ந்துள்ளார். அதில், “சென்னை புரமோஷனை முடித்துவிட்டு ஹைதராபாத் திரும்பியதும் 5 மணி நேரம் தூங்கியபின் புஷ்பா - 2 இறுதிநாள் படப்பிடிப்புக்கு விரைந்தேன். திரைத்துறைக்கு வந்து ஏழெட்டு ஆண்டுகளில் கடைசி 5 ஆண்டுகள் அதிக நேரம் புஷ்பா குழுவுடனே இருந்திருக்கிறேன்.

எவ்வளவு நினைவுகள், மனிதர்கள்... அனைத்து உணர்ச்சிகளும் மொத்தமாகத் தாக்குவதுபோல் இருக்கிறது. நீண்ட நாள்கள் கழித்து வருத்தமடைகிறேன். சினிமாத்துறையில் என்னை யார் அறிந்ததைவிடவும் நடிகர் அல்லு அர்ஜுனும் இயக்குநர் சுகுமாரும் அதிகம் தெரிந்து வைத்திருக்கின்றனர். நிறைய பேரை மிஸ் செய்வேன். கடினமான விஷயத்தைக் கைவிடுவதுபோல் இருக்கிறது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.