நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
யாத்திசை திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் இரண்டாம் உலகப்போர் கதையில் புதிய படம் தயாராகி வருகிறது.

ஜேகே பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டிலிருந்து இடைவெளிவிட்டு நடைபெற்று வந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போர் பின்னணியில் முழுமையாக உருவாகும் முதல் தமிழ்ப்படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
The filming of the new movie starring actor Sasikumar has been completed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










