சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த படம் தயாராகி வருகிறது. நகைச்சுவையான காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இது அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடரந்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: கொட்டுக்காளி திரைப்படத்துக்கு சர்வதேச விருது!
படத்தின் பூஜை பொள்ளாச்சி - மாசாணி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதில், சூர்யா, ஆர். ஜே. பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். ஒரே கட்டமாக 35 நாள்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். நாயகியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார்.
இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை ஸ்வாசிகா சூர்யா - 45 படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









