வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்த லப்பர் பந்து படக்குழு!

இளையராஜாவை சந்தித்த லப்பர் பந்து படக்குழு...

News image
Updated On :1 அக்டோபர் 2024, 3:25 pm IST

லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான படம் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கியிருக்கும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என ரசிகர்களிமிடமிருந்து பாராட்டுகளும் கிடைத்துள்ளன.

கிரிக்கெட்டை மையமாக வைத்து குடும்பப் படமாகவும் இது உருவாகியுள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் படம் கவர்ந்துள்ளது.

ரசிகர்களைத் தாண்டி இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பாராட்டியிருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் பொன்மனச் செல்வன் படத்தில் இளையராஜா இசையமைத்த, ‘நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடலை அட்டகத்தி தினேஷ் காட்சிகளுக்குப் பயன்படுத்தியிருந்தனர். படத்திற்கான விமர்சனங்களில் அப்பாடல் முக்கிய பங்கு வகித்திருந்தது.

இதனால், நடிகர்கள் தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்பட லப்பர் பந்து படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.