மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

பிரதர் வெளியாவதில் சிக்கல்?

பிரதர் படத்தின் வெளியீடு குறித்து...

News image
Updated On :29 அக்டோபர் 2024, 6:13 pm IST

ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எம். ராஜேஷ், ‘சிவா மனசுல சக்தி’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழில் வெற்றி பெற்ற நகைச்சுவை பாணி இயக்குநராக வலம் வந்தவர்.

இவரது படங்களில் நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள் பெரியளவு கவனம் பெற்றவை. இன்றுவரை, இவரது ‘நண்பண்டா’ வசனம் நண்பர்களுக்கு இடையேயான பேச்சுகளில் இடம்பெறத் தவறுவதில்லை. தற்போது, நடிகர் ஜெயம் ரவியை வைத்து பிரதர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின், ‘மக்காமிஷி’ பாடல் மிகவும் புகழ்பெற்றது. தீபாவளி வெளியீடாக அக். 31 ஆம் தேதி பிரதர் வெளியாகிறது. படத்திற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்க்ரீன் செவன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கோல்ட்மைன்ஸ் டெலி ஃபிலிம்ஸ் இடையேயான நிதி பிரச்னை முடிவடையாததால் பிரதர் வெளியீட்டில் சிக்கல் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.