நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமந்தாவின் சிட்டாடல் 2-வது டிரைலர்!

சிட்டாடல் ஹனி பனி இரண்டாவது பாடல்...

News image

வருண் தவான், சமந்தா.

Updated On :30 அக்டோபர் 2024, 5:03 pm IST

நடிகை சமந்தா நடிப்பில் உருவான சிட்டாடல் இணையத் தொடரின் இரண்டாவது டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா மயோசிடிஸ் நோய் பாதிப்பிலிருந்து மீண்டதிலிருந்து திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். விரைவில் தன் தயாரிப்பிலேயே, ‘மா இண்டி பங்காரம்’ என்கிற ஆக்சன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதற்கிடையே, அவர் நடித்து முடித்த இணையத் தொடர் ’சிட்டாடல் ஹனி பனி’ (Citadel - honey bunny). ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவான இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடியில் நவ. 7 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் இரண்டாவது டிரைலரை வெளியிட்டுள்ளனர். முதல் டிரைலர் சில நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது.

இதையும் படிக்க: ஓடிடியில் ஹிட்லர்!

சிட்டாடல் தொடரில் சமந்தா உளவுத்துறை ஏஜெண்டாக நடித்திருக்கிறார். அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்னைகளுமாகத் இத்தொடர் உருவாகியுள்ளது.

அமெரிக்க இணையத் தொடராக உருவான சிட்டாடல் ஸ்பெயின், மெக்சிகன் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் சமந்தா, வருண் தவான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.