ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ஆண்ட்ரியா பேச மறுத்துவிட்டார்.
நடிகை ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான அனல்மேல் பனித்துளி கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.
தற்போது, கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, நடிகர் கவினுடன் மாஸ்க் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஆண்ட்ரியா.
அடிக்கடி கல்லூரி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரிகளையும் நடத்தி எப்போதும் வெளிச்சத்திலே இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது பயணங்களையும் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், தனியார் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாத்துறையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்விகேட்கப்பட்டது.
அதற்கு ஆண்ட்ரியா, ‘நோ கமண்ட்ஸ். என்னிடம் அதைக் கேட்க வேண்டாம்’ எனப் பதிலளித்தார். கடை திறப்பு விழாவில் இதைப்பற்றிக் கேட்டதால் கேள்வியை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆண்ட்ரியா மலையாளத்தில் அன்னயும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் சீதையிடம் வேண்டிக்கொண்டது இதுதான்: நடிகை சாய் பல்லவி

இறுதிச் சடங்குகளில் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் : மஞ்சு வாரியர்

இதயம் முரளி என் வாழ்க்கையில் நெருக்கமான திரைப்படம்: ப்ரீத்தி முகுந்தன்








