மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

நோ கமண்ட்ஸ்! ஹேமா கமிட்டி அறிக்கையைப் பேச மறுத்த ஆண்ட்ரியா!

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பேச நடிகை ஆண்ட்ரியா மறுப்பு.

ஆண்ட்ரியா.

Published On :

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகை ஆண்ட்ரியா பேச மறுத்துவிட்டார்.

நடிகை ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமல்லாது இசைக் கச்சேரிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான அனல்மேல் பனித்துளி கவனம் பெற்றது. பிசாசு - 2 திரைப்படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.

தற்போது, கோபி நயினாரின் மனுசி படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக, நடிகர் கவினுடன் மாஸ்க் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

ஆண்ட்ரியா.

ஆண்ட்ரியா.


அடிக்கடி கல்லூரி மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் இசைக் கச்சேரிகளையும் நடத்தி எப்போதும் வெளிச்சத்திலே இருக்கும் ஆண்ட்ரியா அவ்வபோது பயணங்களையும் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், தனியார் கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆண்ட்ரியாவிடம் மலையாள சினிமாத்துறையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த நீதிபதி ஹேமா அறிக்கையைக் குறிப்பிட்டு கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு ஆண்ட்ரியா, ‘நோ கமண்ட்ஸ். என்னிடம் அதைக் கேட்க வேண்டாம்’ எனப் பதிலளித்தார். கடை திறப்பு விழாவில் இதைப்பற்றிக் கேட்டதால் கேள்வியை மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

ஆண்ட்ரியா மலையாளத்தில் அன்னயும் ரசூலும், லண்டன் பிரிட்ஜ், லோஹம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.