ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தீபிகா படுகோன் மருத்துவமனையில் அனுமதி!

நடிகை தீபிகா படுகோன் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

News image

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங்.

Updated On :8 செப்டம்பர் 2024, 7:44 am

DIN

நடிகை தீபிகா படுகோன் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.

இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் திபீகா படுகோன். தமிழில், கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, பான் இந்தியப் படங்களில் நடித்து வருகிறார்.

2018-ல் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்டவர், திருமணத்துக்குப் பின்பும் பல படங்களில் நடித்தார். இறுதியாக கல்கி வெளியாகியிருந்தது.

கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோன்.

கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோன்.

இதற்கிடையே, தீபிகா கருவுற்றார். அதனால், இந்தாண்டு எந்த படங்களிலும் ஒப்பந்தமாகாமல் ஓய்வில் இருக்கிறார். இம்மாத இறுதியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் சொன்னதால், தன் கணவருடன் நிறைமாத புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்த நிலையில், மும்பையிலுள்ள பிரபல மருத்துவமனையில் பிரசவத்திற்காக தீபிகா படுகோன் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (செப். 7) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அன்றைய நாள் குழந்தை பிறந்தால் நல்ல நேரம் என்பதைக் கணக்கிட்டு மருத்துமனைக்குச் சென்றிருக்கிலாம் என்றும் நேற்றே சீசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.