மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

டெல்லி கணேஷ், சி. ஆர். விஜயகுமாரிக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது!

நடிகர் சங்க பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

News image

விருது நிகழ்வில்..

Updated On :8 செப்டம்பர் 2024, 5:33 pm IST

நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி. ஆர். விஜயகுமாரி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் கருணாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகாரில் நிரூபிக்கப்படுபவர்கள் சினிமாவில் பணியாற்ற 5 ஆண்டு வரை தடை விதிக்கப்படும் என தீர்மானித்துள்ளனர்.

மேலும், நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், அதை அடுத்த 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளனர்.

நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இறுதியாக, நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும் சி. ஆர். விஜயகுமாரி ஆகியோருக்கு ’கலையுலக வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.