உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

லியோ வசூலை முறியடிக்காத கோட்!

கோட் வசூல் குறித்து...

News image
Updated On :22 செப்டம்பர் 2024, 4:36 pm IST

கோட் திரைப்படத்தின் வசூல் லியோவின் வசூலை முறியடிக்கவில்லை.

நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் செப்.5ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

கோட் படம் திரைகளில் வெளியாகி முதல் நான்கு நாள்களில், ரூ. 288 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இதனால், படம் மிகப்பெரிய வணிக வெற்றியைப் பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சில நாள்களில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

முக்கியமாக, கேரளம் மற்றும் ஆந்திரத்தில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. கோட் படத்தால் தெலுங்கு விநியோகஸ்தர்களுக்கு ரூ.13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், 13 நாள்களில் கோட் திரைப்படம் ரூ.413 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனாலும், ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூலித்த லியோவின் வசூலை முறியடிக்க முடியாது என்றே தெரிகிறது. ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான கோட், அதே அளவிற்கான வசூலை மட்டுமே அடைந்திருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செப். 27 ஆம் தேதி மெய்யழகன், தேவரா உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் கோட் திரைப்படத்தை முழுமையாக திரையரங்குகளிலிருந்து நீக்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.