
25 நாள்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் இவ்வளவா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியான 25 நாள்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து...

சூர்யா, மமிதா பைஜூ - படம் - இன்ஸ்டாகிராம்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியான 25 நாள்களில் இதுவரை, ரூ. 260 கோடி வசூல் செய்துள்ளதாக திங்கள்கிழமை (செப். 7) அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக அமைந்துள்ளது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான கருப்பு திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிமகாக வசூல் செய்து சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இதையடுத்து, வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் வசூல் ரீதியாக வெற்றிப் படமாகவே அமைந்து, உலகளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், “மனதை நெகிழ வைக்கும் இந்த பிளாக்பஸ்டர் திரைப்படம், 25 நாள்களாக உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
THE ONE DID IT IN STYLE ð¥â¤ï¸âð¥#VishwanathAndSons crosses a MASSIVE â¹260 CRORES+ Worldwide Gross ð¥ð¥ð¥
— Sithara Entertainments (@SitharaEnts) September 7, 2026
25 days of heartfelt blockbuster and still running successfully in cinemas near you ð¤©ð¥³#BlockbusterVAS #BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri⦠pic.twitter.com/eoo8qoTS7J
Summary
It was announced on Monday (Sept. 7) that the film Viswanath and Sons has grossed ₹260 crore in the 25 days since its release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





