
வியப்பில் ஆழ்த்திய விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல் குறித்து...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல். - படம் - எக்ஸ்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் இதுவரை, ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 30) அறிவித்துள்ளது.
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெள்ளிக்கிழமை (ஆக. 14) திரையரங்குகளில் வெளியானது.
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் 40 வயது தொழிலதிபரான சூர்யா, அக்குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டைக் குணப்படுத்தப் போராடுவதுடன் கூடிய குடும்ப கதையாக அமைந்துள்ளது.
நடிகர் சூர்யாவுக்கு கருப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியானதால் தொடக்கம் முதலே இந்தப் படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில், படம் வெளியான நாள் முதல் இதுவரை உலகளவில் ரூ. 240 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
Some bonds hold strong⦠and this is what the Audience, Sanjay Vishwanath and his Family have built with â¤ï¸â¤ï¸#VishwanathAndSons crosses 240 CRORES+ WORLDWIDE GROSS and still going strong ð¥ð¥ #BlockbusterVAS #BlockbusterVishwanathAndSons@Suriya_offl #VenkyAtluri⦠pic.twitter.com/CShvwwg8rz
— Sithara Entertainments (@SitharaEnts) August 30, 2026
Summary
The production company announced on Sunday (Aug. 30) that the film Viswanath and Sons has grossed ₹240 crore so far.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






