உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

ரவி தேஜா திரைவாழ்வில் முதல்முறை... வசூல் சாதனை படைத்த இருமுடி!

நடிகர் ரவி தேஜாவின் இருமுடி படத்தின் வசூல் சாதனை குறித்து...

Irumudi movie's poster

இருமுடி படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / மைத்ரி மூவி மேக்கர்ஸ்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:17 pm IST

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியான நடிகர் ரவி தேஜாவின் இருமுடி திரைப்படம் ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்‌ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இருமுடி (தமிழில் இருமுடி கட்டு) திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வில்லாதி வில்லனே என்ற சாமி பாடல் திரையரங்குகளில் மிகுந்த கவனம் பெற்றது.

வழக்கமான மாஸ் மசாலா கலந்த ரவி தேஜா படமாக அல்லாமல் சிறு கிராமத்து குழந்தைகளின் பாலியல் சீண்டல்கள் குறித்து உணர்ச்சிகரமாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரூ.150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதுதான் ரவி தேஜா படங்களிலேயே முதல்முறையாக ரூ.150 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளது. இதற்கு முன்னதாக, சீரஞ்சீவியுடன் சேர்ந்து நடித்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது.

தனி நாயகனாக ரவி தேஜா மட்டுமே நடித்து இதுவரை ரூ.150 கோடி என்ற மைல்கல்லை இருமுடி தவிர்த்து வேறெந்த படமும் கடந்ததில்லை குறிப்பிடத்தக்கது.

Summary

Ravi Tejas Irumudi became his first-ever solo film to cross the ₹150 crore

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.