டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

லண்டன் பறந்த துப்பறிவாளன் 2 படக்குழு! 

நடிகர் விஷால் இயக்கும் துப்பறிவாளன் 2 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 4:37 pm IST

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். படத்தின் வெற்றி காரணமாக, இரண்டாம் பாக பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தினார். ஆனால், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இப்படத்திலிருந்து மிஷ்கின் விலகினார்.

படம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகர் விஷால் தானே இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 

அதேநேரம், துப்பறிவாளன் - 2 படத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து, தன் அடுத்தடுத்த படங்களில் விஷால் கவனம் செலுத்தினார். அவர் நடிப்பில் இறுதியாக வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்து அசத்தியது. தற்போது, ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் எக்ஸ் தளத்தில் துப்பறிவாளனைக் குறிக்கும் புகைப்படத்தை முகப்புப் படமாக வைத்திருந்தார். இதனால், விஷால் துப்பறிவாளன் - 2 படத்தின் பணிகளை மேற்கொள்வார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் விஷால் தனது குழுவுடன் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்புக்கான பகுதிகளை பார்வையிட்டுள்ளதாகவும் பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நாசர், பிரசன்னம் ரஹ்மான் உள்பட பலர் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.