மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டாக்ஸிக் படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா!

யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படம் பற்றி...

News image

நயன்தாரா

Updated On :2 ஏப்ரல் 2025, 3:59 pm

யஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் யஷ் நடிப்பில் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ’டாக்ஸிக்’.

கேஜிஎஃப் - 2 படத்திற்கு அடுத்ததாக யஷ் நடிக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் மற்றும் நடிகர் யாஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு, மும்பையில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நடிகை நயன்தாரா டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இவர் நடித்த டெஸ்ட் திரைப்படம் வருகிறா ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து டாக்ஸிக் திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைவதற்காக நயன்தாரா மும்பை சென்றுள்ளார். தனது மகன்களுடன் அவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்ற நிலையில் அங்கு எடுக்கப்பட்ட விடியோ வெளியாகியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா

மும்பை விமான நிலையத்தில் நயன்தாரா

டாக்ஸிக் திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.