விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிரேமம் பட இயக்குநரின் கைவண்ணத்தில் ரெட்ரோ டிரைலர்!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளார்.

News image

அல்போன்ஸ் புத்திரன், கார்த்திக் சுப்புராஜ். - படம்: எக்ஸ் / கார்த்திக் சுப்புராஜ்.

Updated On :18 ஏப்ரல் 2025, 12:39 pm IST

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரைலரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரைலர் இன்று (ஏப்.18) மாலை வெளியாகவிருக்கிறது.

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருப்பதகாவும் கூறப்படுகிறது.

நேரம், பிரேமம் என ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் உடல்நிலை காரணமாக தற்போது படங்கள் இயக்குவதில் இருந்து விலகியுள்ளார்.

கடைசியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.

இந்நிலையில், டிரைலரை பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.