

செம்பருத்தி, மலர் தொடரில் நாயகனாக நடித்து பிரபலமான நடிகர் அக்னி திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' தொடரில் ஆதி பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அக்னி.
முன்னதாக, கார்த்திக் ராஜ் 'செம்பருத்தி' தொடரில் நடித்திருந்த நிலையில், அவரால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. திரைப்படத்தில் நடிக்கச் சென்றதால், அவருக்கு பதில் நடிகர் அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, மலர் பாத்திரத்தில் நாயகனாக நடிகர் அக்னி நடித்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அந்தத் தொடரில் இருந்து விலகினார்.
நடிகர் அக்னி தொகுப்பாளராக இருந்து சின்ன திரையில் அறிமுகமானவர் என்பதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் அக்னி மற்றும் ராதிகாவுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இதில் சினிமா, சின்ன திரை பிரபலங்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இவர் தன்னுடைய திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
இதையும் படிக்க: இது கோழைத்தனம்! சின்மயி மன்னிப்புக்குக் காட்டமான மோகன். ஜி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.