பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

முன்பதிவில் சாதனை படைத்துள்ள ஜன நாயகன் திரைப்படம் குறித்து...

Jan Nayagan poster.

ஜன நாயகன் போஸ்டர். - படம்: எக்ஸ் / அகிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ்

Published On :

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் முன்பதிவு லியோ சாதனையை முறியடித்துள்ளது.

பிரிட்டனில் ஒரே நாளில் அதிகமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக இது இருக்குமெனக் கூறப்படுவதால், மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரியாமணி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

கைதி, மாஸ்டர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அனிருத் இசையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜன. 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

மலேசியாவில் புக்கிட் ஜலீல் திடலில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

வெளிநாட்டில் இதற்கான முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், பிரிட்டனில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

லியோ திரைப்படத்துக்கு ஒரே நாளில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையான நிலையில், ஜன நாயகன் 12,700 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Summary

Jana Nayagan destroys the previous 24-hour ticket sales record of LEO.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.