12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படம் குறித்து...

Published On :

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படமான ’கிங்டம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பெல்லி சூப்புலு, எவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்த இவர் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.

இவர் கடைசியாக கல்கி திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

’கிங்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு தமிழில் நடிகர் சூர்யாவும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆரும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகிற மே 30 அன்று தமிழ். தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.