நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விஜய் தேவரகொண்டாவின் புதிய படம்: டீசர் வெளியீடு!

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12-வது திரைப்படம் குறித்து...

News image
Updated On :12 பிப்ரவரி 2025, 4:26 pm IST

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12 வது திரைப்படமான ’கிங்டம்’ படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நுவ்விலா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பெல்லி சூப்புலு, எவடே சுப்ரமணியம் போன்ற படங்களில் நடித்த இவர் ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார்.

இவர் கடைசியாக கல்கி திரைப்படத்தில் அர்ஜுனர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்ஸி படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

’கிங்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசருக்கு தமிழில் நடிகர் சூர்யாவும் தெலுங்கில் ஜூனியர் என்டிஆரும் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வருகிற மே 30 அன்று தமிழ். தெலுங்கு, ஹிந்தியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.