நடிகர் ரஜினிகாந்த்தை உறியடி விஜய் குமார் சந்தித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: இமான் இசையில் ஆண்ட்ரியா குரலில் வெளியான லெவன் பட பாடல்!
கூலி படத்தை மே மாத வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய் குமார் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தது குறித்து பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “இறுதியாக ரஜினி சாரை சந்தித்தேன். கூலி படப்பிடிப்பு தளத்தில் பார்த்து ஆசி வாங்கியது வாழ்நாளுக்குமான தருணம். லவ் யூ தலைவா. நண்பன் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.