பிக் பாஸ் வீட்டில் கடைசியாக, 24வது போட்டியாளராகக் கலந்துகொண்ட ரயான், பிக் பாஸ் வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையே இறுதி சுற்றுக்குத் தேர்வாகும் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், வார இறுதியான இன்று (ஜன. 5) யார் வெற்றியாளர் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக புள்ளிகளைப் பெற்ற ரயான், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முதல் இறுதிப் போட்டியாளராகத் தேர்வாகியுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் சேதுபதி, டிக்கெட் டூ ஃபினாலேவில் வெற்றி பெற்ற போட்டியாளரின் பெயரை போட்டியாளர்களிடமே கேட்டு அதனை உறுதி செய்தார். அனைவரும் அதிகப் புள்ளிகளைப் பெற்ற ரயான் பெயரைக் கூறினர். அதன்படி சிறப்பாக விளையாடிய ரயானுக்கு இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான டிக்கெட்டை விஜய் சேதுபதி வழங்கினார்.

விஜய் சேதுபதியுடன் ரயான்
அதனைப் பெற்றுக்கொண்டு பேசிய ரயான், ''பிக் பாஸ் வீட்டிற்கு வந்த கடைசி போட்டியாளர் நான்தான் சார். 24வது போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தேன்'' எனக் கூறினார்.
அதனை நினைவுகூர்ந்த கேட்ட விஜய் சேதுபதி, ''கடைசியாக வந்து இந்த வீட்டின் முதல் இறுதிப்போட்டியாளராக முன்னேறியிருக்கிறீர்கள்'' எனப் பாராட்டினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று ராணவ் வெளியேற்றப்பட்ட நிலையில், 9 போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். இதில் ரயான் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மற்ற 8 போட்டியாளர்களுக்கும் சம வாய்ப்புள்ளதை நம்புவதாக விஜய் சேதுபதி கூறினார்.

சக போட்டியாளர்களுடன் ரயான்
கடந்த முறை வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த அர்ச்சனா வெற்றி பெற்றிருந்தார். தற்போது இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ள ரயானும் வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவர் என்பதால், பலரும் ரயான் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர்.
இறுதிப் போட்டிக்கு நுழைந்த ரயானுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் ஸ்லம் டாக் டீசர்!

இன்றைய செய்திகள் ஜூன் 1 - நேரலை!

இனி பொதுமக்களும் பிக் பாஸில் பங்கேற்கலாம்! பிக் பாஸ் காமன்மேன்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



