சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

விரைவில் பிரபாஸ் திருமணம்! மணப்பெண் யார்?

பிரபாஸ் திருமணம் குறித்து...

News image
Updated On :13 ஜனவரி 2025, 1:25 pm IST

நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமண நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.

பாகுபலி, சலார் படங்களின் பிரம்மாண்ட வெற்றியால் இந்தியளவில் முன்னணி நடிகராக பிரபாஸ் மாறியுள்ளார். இவர் நடித்த கல்கி திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, ராஜா சாப் என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஃபேண்டசி கலந்து திகில் படமாக இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நடிகர் பிரபாஸும் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாள்களாகக் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

அதேநேரம், பிரபாஸின் சித்தி விரைவில் பிரபாஸுக்கு திருமணம் நிகழவுள்ளது என தெரிவித்திருந்தார். இதனால், ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து, நடிகை அனுஷ்கா மணப்பெண் இல்லை என உறுதியான தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், கேம் சேஞ்ஜர் புரமோஷனுக்காக நடிகர் ராம் சரண், நடிகர் பால கிருஷ்ணாவுடனான நிகழ்ச்சி ஒன்றில், “பிரபாஸ் திருமணம் செய்யவுள்ள தகவல் உண்மைதான். மணப்பெண் ஆந்திரத்தின் மேற்கு கோதாவரி நகருக்கு அருகே உள்ள கானபவரம் என்கிற ஊரைச் சேர்ந்தவர்” எனத் தெரிவித்தார்.

இதனால், பிரபாஸும் அனுஷ்காவும் இணைவார்கள் என நினைத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.