கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் புதிய படம்...

Published On :

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

அடுத்ததாக, தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விடுதலை - 2 திரைப்படம் திரையரங்குகளில் 25-வது நாளை நிறைவு செய்ததையடுத்து அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட், “விடுதலை - 2 படத்தைத் தொடர்ந்து எங்கள் தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் 7-வது படத்தில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்” எனக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், நடிகர் சூரியின் புதிய படத்தையும் தயாரிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இதை, செல்ஃபி படத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.

வாடிவாசல் படத்திற்குப் பின் தனுஷின் படத்தை வெற்றி மாறன் இயக்குவார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.