12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்து....

Published On :

திரையரங்குகளில் இந்த வாரம் 5 தமிழ் படங்கள் வெளியாகவுள்ளது. எந்தெந்தத் திரைப்படங்கள் நாளை(ஜூலை 10) மற்றும் நாளை மறுநாள்(ஜூலை 11) வெளியாகவுள்ளன என்பதைக் காண்போம்.

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர். இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

எழில் இயக்கத்தில் விமல் நாயகனாக நடித்துள்ள 'தேசிங்கு ராஜா 2' படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகைகள் பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள்.

விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ’ஓஹோ எந்தன் பேபி’. இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் மிஸஸ் & மிஸ்டர். இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ராகவேந்திரா எழுதி இயக்கியுள்ள மாயக்கூத்து திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது. இப்படத்தில் டெல்லி கணேஷ், சாய் தீனா, நாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Summary

5 Tamil films are releasing in theaters this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.