அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

96, மெய்யழகன் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய விருப்பம்: பிரேம் குமார்

96, மெய்யழகன் படங்களை ஹிந்தியில் எடுக்க விருப்பம் தெரிவித்த பிரேம் குமார்...

News image
Updated On :10 ஜூலை 2025, 3:00 pm IST

இயக்குநர் பிரேம் குமார் 96, மெய்யழகன் ஆகிய படங்களை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.

தற்போது, 96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். ஆனால், நடிகர்களின் தேர்வு குழப்பங்களால் அப்படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

இந்த நிலையில், இந்திய திரைக்கதை எழுத்தாளர்கள் விழாவில் கலந்துகொண்ட பிரேம் குமார், ” என் அப்பா வட இந்தியாவில் வளர்ந்த தமிழர் என்பதால் ஹிந்தியில் திரைப்படம் எடுக்க வேண்டும் என விரும்பினேன். அதனால், 96 திரைப்படத்தை முதலில் ஹிந்தியில் எடுக்கத்தான் ஆசைப்பட்டேன். நடிகர் அபிஷேக் பச்சனை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால், அவர் அப்போது என் தொடர்பில் இல்லை.

இன்றும் நேரடியாக ஹிந்தியில் திரைப்படம் எடுக்க ஆசை இருக்கிறது. அதேநேரம், 96 மற்றும் மெய்யழகன் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான விருப்பமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

director prem kumar wants to remake of 96, meyyazhagan in hindi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.