நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சுபம் என்ற சொல்லைக் காண ஆர்வம்: எந்தத் தொடருக்குத் தெரியுமா?

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :28 ஜூலை 2025, 4:33 pm IST

சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள், இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஜீ தமிழ், விஜய் மற்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் ஏராளமான மக்களைச் சென்று சேர்கின்றன. இதனால், இந்த மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் அதிக டிஆர்பி புள்ளிகளையும் பெறுகின்றன.

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர்கள் ஓரிரு ஆண்டுகளில் நிறைவடையும் நிலையில், ஒரு சில தொடர்கள் மட்டுமே 5 ஆண்டுகளைத் கடந்து ஒளிபரப்பாகின்றன. அவ்வாறு ஒளிபரப்பாகும் தொடர்கள், ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி முடிந்த செம்பருத்தி தொடர் 5 ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பானது. ஆனால், அத்தொடரும் இடையிடையே சலிப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

செம்பருத்தி தொடர்

செம்பருத்தி தொடர்

தற்போது விஜய் தொலைககட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. எனினும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர்

பாக்கியலட்சுமி தொடர்

இன்னும் இரு வாரங்களில் பாக்கியலட்சுமி தொடர் முடியவுள்ள நிலையில், இது குறித்து ரசிகர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இரண்டாவது இறுதி வாரத்துக்கான முன்னோட்ட (ப்ரோமோ) விடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், ஒருசிலர் எதிர்மறையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

ரசிகர்களின் சில கருத்துகள்

ரசிகர்களின் சில கருத்துகள்

அதில் ஒருவர், பாக்கியலட்சுமி தொடரில் சுபம் என்ற வார்த்தை ஒளிபரப்பாவதைக் காண ஆவலுடன் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.