இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நடிகை சமந்தா இணையவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது.
படத்தின் கதை முழுக் கற்பனை (fantacy) புனைகதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை இன்று விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனின் அறிவிப்பு விடியோவை பகிர்ந்த சமந்தா, “ஆமாம். ராணிதான்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சமந்தா இப்படத்தில் இணையலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில் இப்பதிவு அதை உறுதிபடுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க: சண்முக பாண்டியனின் படை தலைவன் வெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.