கூலி திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்து அமீர் கான் பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம், லியோ திரைப்படங்களுக்குப் பின் இந்தியளவில் கவனிக்கும் இயக்குநராக உருவெடுத்தார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை நாயகனாக வைத்து கூலி படத்தை உருவாக்கி வருகிறார். இதில், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர் கான் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அமீர் கான், “கூலி திரைப்படத்தில் என் கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும். கண்டிப்பாக அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்துடன் நாகர்ஜுனா, அமீர் கான் என நட்சத்திர பட்டாங்களே இணைந்துள்ளதால் இப்படம் பெரிய வணிகத்தைச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதையும் அமீர் கான் அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.