அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

கூலி, குபேரா பட அனுபவம் பகிர்ந்த நாகார்ஜுனா..!

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்கள் குறித்து பேசியதாவது...

News image

கூலி, குபேரா படங்களில் நாகார்ஜுனா.

Updated On :13 ஜூன் 2025, 7:02 pm IST

நடிகர் நாகார்ஜுனா கூலி, குபேரா படங்களில் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்திலும் சேகர் கம்முலா இயக்கியுள்ள குபேரா படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கூலி திரைப்படம் ஆக.14ஆம் தேதியும் குபேரா திரைப்படம் ஜூன் 20ஆம் தேதியும் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில், படப் புரமோஷனுக்காக நேர்காணல் அளித்து வரும் நாகார்ஜுனா பேசியதாவது:

கூலி, குபேரா இரண்டும் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குபேரா இயக்குநர் சேகர் கம்முலா இயல்பாக நடிக்க வேண்டும் என்பார்.

நடை, உடை என எல்லாவற்றிலும் எதார்த்தத்தை எதிர்பார்ப்பார். நான் நடப்பதில் ஹீரோயிசம் இருப்பதாகக் கூறி மாற்றி நடக்கச் சொன்னார்.

லோகேஷ் கனகராஜ் படங்கள் சாதாராண வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை. அவர் என்னை நடக்கும்போது புலி போல் நடக்கச் சொல்லுவார்.

இரண்டு படங்களுமே எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.