நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மம்மூட்டிக்கு புற்றுநோயா? செய்தி தொடர்பாளர் விளக்கம்!

மம்மூட்டி உடல்நலம் குறித்து...

News image

மம்மூட்டி

Updated On :17 மார்ச் 2025, 3:47 pm IST

நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்து வெளியான தகவல்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டோமினிக் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓரளவு வணிக வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக, மம்மூட்டி நடித்து முடித்த ‘பசூகா’ திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான, புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மம்மூட்டி இயக்குநர் மகேஷ் நாராயணன் படத்தில் மோகன்லால், குஞ்சக்கோ போபன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மம்மூட்டி படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார். திடீரென ஏன் ஓய்வு எடுக்கச் சென்றார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்ததும் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால்தான் அவரால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என தகவல்கள் பரவியதால் மம்மூட்டி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், மம்மூட்டி தரப்பிலிருந்து அவரின் செய்தி தொடர்பாளர் புதிய விளக்கமளித்துள்ளார். அதில், ”மம்மூட்டி ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருக்கிறார். ரம்ஜானுக்காக அவர் நோன்பு இருப்பதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் எனப் பரவும் வதந்திகள் பொய்யானவை. விரைவில், அவர் மகேஷ் நாராயணன் படப்பிடிப்பில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.