காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மம்மூட்டிக்கு புற்றுநோயா? செய்தி தொடர்பாளர் விளக்கம்!

மம்மூட்டி உடல்நலம் குறித்து...

மம்மூட்டி

Published On :

நடிகர் மம்மூட்டியின் உடல்நலம் குறித்து வெளியான தகவல்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மம்மூட்டி நடிப்பில் இறுதியாக வெளியான டோமினிக் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஓரளவு வணிக வெற்றியைப் பெற்றது.

அடுத்ததாக, மம்மூட்டி நடித்து முடித்த ‘பசூகா’ திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான, புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, மம்மூட்டி இயக்குநர் மகேஷ் நாராயணன் படத்தில் மோகன்லால், குஞ்சக்கோ போபன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மம்மூட்டி படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் ஓய்வில் இருக்கிறார். திடீரென ஏன் ஓய்வு எடுக்கச் சென்றார் என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்ததும் மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதால்தான் அவரால் படப்பிடிப்புக்கு வர முடியவில்லை என தகவல்கள் பரவியதால் மம்மூட்டி ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில், மம்மூட்டி தரப்பிலிருந்து அவரின் செய்தி தொடர்பாளர் புதிய விளக்கமளித்துள்ளார். அதில், ”மம்மூட்டி ஆரோக்கியமான உடல்நலத்துடன் இருக்கிறார். ரம்ஜானுக்காக அவர் நோன்பு இருப்பதால் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு புற்றுநோய் எனப் பரவும் வதந்திகள் பொய்யானவை. விரைவில், அவர் மகேஷ் நாராயணன் படப்பிடிப்பில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.