தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் டப்பிங் சீரியல்!

ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், கன்னடத்தில் சீதா ராமன் என்ற பெயரில் ஹிட்டானது.

News image

ராமன் தேடிய சீதை - படம் | இன்ஸ்டாகிராம்

Updated On :17 மார்ச் 2025, 10:46 am

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாற்று மொழித் தொடர் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது.

ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், கன்னட மொழியில் சீதா ராமன் என்ற பெயரில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படுகிறது. இன்று முதல் (மார்ச் 17) இத்தொடர் ஜீ தமிழில் பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

தமிழ் சின்ன திரையில் மொழிமாற்றம் (டப்பிங்) செய்து ஒளிபரப்பாகும் தொடர்கள் கடந்த சில ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது. பல தமிழ் சின்ன திரை தொடர்கள் மாற்று மொழித் தொடர்களுக்கு இணையாக பெரும் பொருள் செலவுடன் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே தற்போது கன்னடத்தில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சீதா ராமன் தொடர், தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பப்படவுள்ளது. இத்தொடருக்கு ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Story image

dinamani

ஜீ தமிழில் சீதா ராமன் என்ற பெயரில் சமீபத்தில் பிரியங்கா நல்காரியின் தொடர் ஒளிபரப்பானது. பின்னர் பிரியங்காவுக்கு பதிலாக அதில், ஸ்ரீ பிரியங்கா நடித்து வந்தார்.

இதனால், இந்த கன்னட மொழித் தொடருக்கு ராமன் தேடிய சீதை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

பிறப்பிலேயே சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் தனியாளாக வாழ்ந்து வரும் சீதையின் (நாயகி) வாழ்க்கையில் ராமனின் (நாயகன்) வருகை எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது?

ராமனின் வருகையால் சீதையின் வாழ்க்கை வண்ணமயமாகுமா? என்பது தான் இந்தத் தொடரின் மையக் கரு.

ஏற்கனவே கணவனை இழந்த ஒரு பெண், தனது பெண் குழந்தையுடன் வசித்து வரும்போது, நாயகன் அவளை திருமணம் செய்துகொண்டதால் என்ன நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து இதயம் தொடர் ஒளிபரப்பானது.

தற்போது அந்தத் தொடரின் சாயலில் மாற்று மொழித் தொடர் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.