இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் பிரபல தொடர்!

800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் செவ்வந்தி தொடர்.

செவ்வந்தி தொடரின் காட்சி.

Published On :

மக்கள் மத்தியில் பிரபலமடைந்த செவ்வந்தி தொடர் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் 'செவ்வந்தி'. இத்தொடர் கடந்த 2022 ஜூலை 11 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் மகராசி தொடர் பிரபலம் திவ்யா ஸ்ரீதர் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் இத்தொடரில் நக்‌ஷத்ரா, நிதிஷ் கிரிஷ், வினோத், பிரியங்கா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

செவ்வந்தி என்ற பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. செவ்வந்தி தன் கணவர் இறந்த பிறகு தன் குடும்பத்தை ஒற்றை ஆளாக எவ்வாறு கவனித்துக் கொள்கிறாள் என்பதே இத்தொடரின் மையக்கரு.

இத்தொடர் தற்போது 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. செவ்வந்தி தொடரை இல்லத்தரசிகள் அதிகம் விரும்பி பார்க்கின்றனர். 800 நாள் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தொடர் குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Story image

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இத்தொடர் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வந்தி தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.