இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

விஜய் - சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்கள் நேரடி மோதல்!

பொங்கல் வெளியீடாக விஜய் - சிவகார்த்திகேயன் படங்கள்...

News image
Updated On :25 மார்ச் 2025, 12:03 pm IST

விஜய், சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகின்றன.

நடிகர் விஜய் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடித்துவரும் ஜன நாயகன் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜன. 9 ஆம் தேதி திரைக்கு வருமென நேற்று (மார்ச். 24) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அடுத்தாண்டு வெளியாகவுள்ள படத்தின் வெளியீட்டுத் தேதியை இவ்வளவு விரைவாக அறிவிக்க வேண்டியதன் தேவை என்ன? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

அண்மையில், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சில நாள்களுக்கு முன் நேர்காணலில் பேசியபோது, பராசக்தி திரைப்படத்தை 2026, பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

இதுவே, ஜன நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்கான காரணம் எனத் தெரிகிறது. முதலிலேயே விஜய் படம் பொங்கல் வெளியீடாக வருகிறது எனக் கூறிவிட்டால், சிவகார்த்திகேயன் படக்குழுவினர் வேறு தேதிக்கு வெளியீட்டை மாற்றுவார்கள் என நினைத்திருப்பார்கள்.

ஆனால், பராசக்தி தயாரிப்பாளர் ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்புக்குப் பின் மீண்டும் உறுதியாக பராசக்தி பொங்கலுக்கு வெளியாகும் என மறைமுகமாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான விஜய், சிவகார்த்திகேயன் படங்களின் தயாரிப்பாளர்கள் பொங்கல் வெளியீட்டில் நேரடியாகவே மோதிக்கொண்டிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.