மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்! ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு தொடர்பாக...

News image
Updated On :31 மார்ச் 2025, 3:47 pm IST

நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து பிரபலமானவர் நடிகை டெல்னா டேவிஸ். இதனைத் தொடர்ந்து அன்பே வா தொடரில் மூலம் சின்ன திரையில் அறிமுகமானார்.

இத்தொடரில் நடித்ததன் மூலம் பலதரப்பட்ட ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார் டெல்னா. பின்னர் இத்தொடரில் இருந்து விலகினார்.

கடந்த சில மாதங்களாக எந்த புதிய தொடரிலும் நடிக்காத டெல்னா, சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய தொடரான ஆடுகளம் தொடரில் நடிக்கிறார்.

இத்தொடரின் முன்னோட்டக் காட்சி வெளியாகி 4 மாதங்களுக்குப் பிறகு, இத்தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆடுகளம் தொடர் வரும் ஏப். 7 ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு வாரத்தின் ஏழு நாள்களும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் டெல்னா டேவிஸுக்கு ஜோடியாக மெளன ராகம் -2 தொடர் நாயகன் சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார். மேலும், பிரதான பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.