/

இறுதிக்கட்டத்தில் பொன்னி சீரியல்!

விரைவில் நிறைவடைகிறது பொன்னி தொடர்.

News image
Updated On :8 மே 2025, 5:27 pm IST

பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் தொடர் பொன்னி. இத்தொடரில் நாயகனாக சபரி நாதனும் நாயகியாக வைஷ்ணவி சுந்தரும் நடித்து வருகின்றனர்.

இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்த்து வருகின்றனர். இத்தொடர் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இத்தொடர் 2023 மார்ச் முதல் 500 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடருக்கான கதையை பிரியா தம்பி எழுதி வருகிறார். நீரவி பாண்டியன் இயக்கி வருகிறார். பொன்னி என்ற பாத்திரம் எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொன்னி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இத்தொடருக்கான கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்படிப்பு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பொன்னி தொடர் நிறைவடையவுள்ளது இத்தொடர் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.