கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சன் டிவியில் மதிய நேரத் தொடர் செய்த சாதனை!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது.

News image

நந்தன் - சாம்பவி

இன்ஸ்டாகிராம்

Updated On :19 மே 2025, 10:36 am

DIN

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மதிய நேரத் தொடர் 800 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகிவருகிறது.

சாம்பவி குருமூர்த்தி மற்றும் நந்தன் லோகநாதன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இலக்கியா தொடர், 800 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

மக்களைத் தக்கவைக்கும் வகையிலான கதையம்சமும், ரசிகர்களைக் கவரும் வகையிலான நடிகர்களின் நடிப்பும் இலக்கியா தொடருக்கான ரசிகர்களைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்துவருகிறது.

இலக்கியா தொடர்

இலக்கியா தொடர்

முதன்மை நடிகர்களுடன் சுஷ்மா நாயர், காயத்ரி சேஷாத்ரி, ராஜேஸ்வரி, பரத் கல்யாண், ஆகியோரும் இத்தொடரின் வெற்றிக்கு காரணமான முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர்.

எதிர்பாராதவிதமாக இலக்கியாவுக்கு நடக்கும் திருமணமானது கெளதம் என்ற இளைஞரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைத்து, குடும்ப வாழ்க்கையிலும், சொந்தத் தொழிலும் மேம்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து இலக்கியா தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இலக்கியாவை வெறுப்பவராக இருந்தாலும், படிப்படியாக இலக்கியாவின் பொறுமை, அன்பு, சுயநலமின்மை போன்றவற்றை கெளதம் உணரத் தொடங்கி, இலக்கியாவுக்கு மனைவியாக அங்கீகாரம் கொடுத்து, வாழ்கையை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்துகிறார் கெளதம்.

தற்போது இந்தத் தொடர் 800 நாள்களை நிறைவு செய்துள்ளது. இதனால், குழுவினர் கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர், 800 நாள்களாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தொடர்வது மிகவும் அரிதானது. ஆனால், இலக்கியா தொடர் இதனை முறியடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த தொடராக உள்ளது.

பாரதி தம்பி திரைக்கதையில் பழனிசாமி வசனம் எழுத, நட்ராஜ் இத்தொடரை இயக்குகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.