விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கனா கண்டேனடி தொடர் விரைவில் முடிவடையவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
மூன்று தோழிகள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு, எப்படி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் வாழ்க்கையை மாற்றுகிறார்கள் என்பதை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. தென்றல் தொடரை தயாரித்த விகடன் நிறுவனமே, இந்தப் புதிய தொடரையும் தயாரித்து வருகிறது.
கனா கண்டேனடி தொடரில் பிரதான வேடங்களில் சைத்ரா, கவிதா சம்பத், சஞ்சனா ஆகியோர் நடிக்கின்றனர். நாயகனாக ஜாய்சன் நடிக்கிறார்.
கனா கண்டேனடி தொடர் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இந்தத் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
தொடர் ஆரம்பிக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில், தொடர் நிறைவடையவுள்ளதாக வெளியாகும் தகவல், கனா கண்டேனடி தொடரை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Reports indicate that the serial Kana Kandenadi, currently airing on Vijay TV, is set to conclude soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











