திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனுசென்னை புழல் சிறை முதல்வர் விஜய் திடீர் ஆய்வுமாநில அந்தஸ்து! பதவியை ராஜிநாமா செய்யவும் தயார்: புதுவை முதல்வர் என். ரங்கசாமிநாா்வே அரசா் ஹரால்டு காலமானார்! அரசராக பட்டத்து இளவரசர் ஹாகோன் பொறுப்பேற்புதிபெத்தில் அணை உடைந்தது! நேபாளத்துக்கு புதிய எச்சரிக்கை! மீட்புப் பணிகள் நிறுத்தம்!

இன்று என்னுள் ஏதோவொன்று... நெகிழ்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

'டூரிஸ்ர் ஃபேமிலி' படக்குழுவை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளதைப் பற்றி...

நடிகர் சூர்யாவுடன் இயக்குநர் அபிஷன் ஜீவிந் - Instagram

Published On :23 மே 2025, 8:08 pm IST

’டூரிஸ்ட் ஃபேமிலி’ படக்குழுவினரை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இலங்கையில் நிலவிய பொருளாதர நெருக்கடியால், அங்கிருந்து தமிழ்நாட்டில் குடியேறும் குடும்பத்தினரை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமின்றி பல்வேறு முக்கிய பிரபலங்களின் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜமௌலி ஆகியோரை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து, நடிகர் சூர்யாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் அபிஷன் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை, ஆனால் இன்று என்னுள் ஏதோவொன்று குணமாகியது’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

முன்னதாக, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மற்றும் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ‘ரெட்ரோ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகின.

மேலும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சர்வதேச அளவில் ரூ.75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.