இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு வாரணாசி எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவ. 18 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது.
இப்படத்திற்காக காசியின் நகரைப்போலவே பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தீபாவளி வெளியீட்டில் இளம் நாயகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.