தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் ஓட்டாக நடிகர் அஜித் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முண்டியடித்தது. ஆனால், அவர் அவர் யாரிடமும் பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், அஜித் குமார் கூறியதாக தனியார் தொலைக்காட்சியின் இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் செய்தியாளர்கள், “மாற்றம் தேவையா? “ எனக் கேட்க, “தேவையில்லை” என அஜித் குமார் கூறியதாக இணையத்தில் வைரலாகியது.
இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லை. தவறான தவலைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
அந்தக் குறிப்பிட்ட தனியார் செய்தி நிறுவனமும் அந்தச் செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Is Change Needed? Ajith Kumar's Controversy and His Manager's Clarification!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அஜித்தின் கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் அறிமுக விடியோ!

இந்தியாவின் பெருமை அஜித் குமார்..! ஆதிக் ரவிச்சந்திரன் புகழாரம்!
அஜித் ரசிகர் மன்றத்தைக் கலைத்தது ஏன்? அமர்க்களம் இயக்குநர் விளக்கம்

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

