தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் ஓட்டாக நடிகர் அஜித் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முண்டியடித்தது. ஆனால், அவர் அவர் யாரிடமும் பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், அஜித் குமார் கூறியதாக தனியார் தொலைக்காட்சியின் இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் செய்தியாளர்கள், “மாற்றம் தேவையா? “ எனக் கேட்க, “தேவையில்லை” என அஜித் குமார் கூறியதாக இணையத்தில் வைரலாகியது.
இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லை. தவறான தவலைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
அந்தக் குறிப்பிட்ட தனியார் செய்தி நிறுவனமும் அந்தச் செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Is Change Needed? Ajith Kumar's Controversy and His Manager's Clarification!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனத்த இதயத்துடன்... கார் ரேஸிங்கிற்குத் தயாரான அஜித் குமார்!
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

குடும்பத்தின் தனியுரிமை, மனநிலையை மதியுங்கள்..! அஜித் குடும்பத்தினர் வேண்டுகோள்!

கிரிக்கெட் விளையாடிய அஜித்... விடியோ வைரல்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



