தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் ஓட்டாக நடிகர் அஜித் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முண்டியடித்தது. ஆனால், அவர் அவர் யாரிடமும் பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில், அஜித் குமார் கூறியதாக தனியார் தொலைக்காட்சியின் இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் செய்தியாளர்கள், “மாற்றம் தேவையா? “ எனக் கேட்க, “தேவையில்லை” என அஜித் குமார் கூறியதாக இணையத்தில் வைரலாகியது.
இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லை. தவறான தவலைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.
அந்தக் குறிப்பிட்ட தனியார் செய்தி நிறுவனமும் அந்தச் செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Summary
Is Change Needed? Ajith Kumar's Controversy and His Manager's Clarification!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமை! சென்னை திரும்பினார் அஜித் குமார்!

அஜித் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்த ராகவா லாரன்ஸ்!
சவாலான பெல்ஜியம் கார் பந்தயத்தில் 2-ம் இடம்பிடித்து அசத்திய அஜித் குமார் அணி!

மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளேன்: ஜி.வி. பிரகாஷ் குமார்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


