தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

மாற்றம் தேவையா? அஜித் குமாரின் சர்ச்சையும் மேலாளரின் விளக்கமும்!

நடிகர் அஜித் குமார் கூறியதாக பரவிய வதந்திகளும் அதற்கான விளக்கம் குறித்தும்...

News image

வாக்களித்த பின்னர் அஜித் குமார். - படம்: பிடிஐ

Updated On :23 ஏப்ரல் 2026, 2:39 pm IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் முதல் ஓட்டாக நடிகர் அஜித் திருவான்மியூர் வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அஜித்திடம் பேட்டி எடுக்க முண்டியடித்தது. ஆனால், அவர் அவர் யாரிடமும் பேட்டி கொடுக்காமல் சென்றுவிட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில், அஜித் குமார் கூறியதாக தனியார் தொலைக்காட்சியின் இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் செய்தியாளர்கள், “மாற்றம் தேவையா? “ எனக் கேட்க, “தேவையில்லை” என அஜித் குமார் கூறியதாக இணையத்தில் வைரலாகியது.

இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “நடிகர் அஜித் அப்படி எதுவும் சொல்லவில்லை. தவறான தவலைப் பரப்பாதீர்கள்” எனக் கூறியுள்ளார்.

அந்தக் குறிப்பிட்ட தனியார் செய்தி நிறுவனமும் அந்தச் செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என மறுப்புத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Summary

Is Change Needed? Ajith Kumar's Controversy and His Manager's Clarification!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.