நடிகர் விஜய்யின் நினைத்தேன் வந்தாய் பட பாணியில் புதிய தொடர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் விஜய், நடிகைகள் ரம்பா, தேவையானி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நினைத்தேன் வந்தாய். நாயகனான விஜய்யை ரம்பா மற்றும் தேவையானி இருவரும் காதலிப்பதுபோல இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும்.
இந்தப் படத்தின் கதையைப்போலவே புதிய தொடர் எடுக்கப்படுகிறது. இந்தத் தொடருக்கு துளசி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் ஸ்ராவ்னிதா ஸ்ரீகாந்த், சம்யுதா, அருண் குமார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். துளசி தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தத் தொடர் மே 11 ஆம் முதல் ஒளிபரப்பாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம், மணமகளே வா, புனிதா தொடர்கள் விரைவில் நிறைவடையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், துளசி தொடரின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
A new serial, styled after Actor Vijay's film Ninaithen Vandhai, is set to air on Sun TV.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











