மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

இந்தியாவில் ரூ.215 கோடி வசூலைக் கடந்த ஸ்பைடர்மேன் திரைப்படம்!

ஹாலிவுட் திரைப்படமான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே வசூல் குறித்து...

News image

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே பட போஸ்டர்கள். - படங்கள்: எக்ஸ் / சோனி பிக்சர்ஸ் இந்தியா.

Updated On :2 ஆகஸ்ட் 2026, 4:30 pm IST

நடிகர் டாம் ஹாலண்ட் நடித்துள்ள ’ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ என்ற திரைப்படம் இந்தியாவில் மட்டுமே இதுவரை ரூ.216 கோடி வசூலித்துள்ளது.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெள்ளிக்கிழமையில் (ஜூலை 31) வெளியானது.  படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ.72. 44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியான கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘தி ஒடிசி’ திரைப்படம் இதுவரைக்கும் இந்தியாவில் ரூ. 165.85 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனை ஸ்பைடர்மேன் திரைப்படம் முந்தியுள்ளது.

இதுவரையில் 173 அமெரிக்க மில்லியன் டாலர் வரையில் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,650 கோடி) வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் தயாரிப்புச் செலவில் 77 சதவிகிதத்தை இரு நாள்களிலேயே இந்தப் படம் வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Spider-Man: A Brand New Day crosses the ₹200 crore mark in India!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.