FOLLOW US

ON GOOGLE DISCOVER

சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

உதயநிதி பேச்சுக்கு மௌனம் கலைத்தாரா த்ரிஷா? சங்கடமாக இருப்பதாக பதிவு

உதயநிதி பேச்சுக்கு கடும் விமர்சனம் எழுந்திருந்த நிலையில் அது குறித்து மௌனம் கலைத்திருக்கிறாரா த்ரிஷா என்பது குறித்து..

News image

த்ரிஷா

Updated On :12 ஆகஸ்ட் 2026, 1:38 pm IST

தஞ்சையில் நடைபெற்ற திமுக போராட்டத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் மற்றும் பெண்கள் குறித்து மோசமாக பேசியது கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிறகு, நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் தகவல் பேசுபொருளாகியிருக்கிறது.

அவர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் பதிவிட்டிருந்தாலும், அதில் பல சூசகமான அர்த்தங்கள் இருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி அவர் என்னதான் பதிவிட்டிருந்தார் என்று இன்று தேடினால் பலருக்கும் கிடைக்காது. அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை ஸ்டோரியாகப் பதிவிட்டிருந்தார்.

அதாவது, இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்திருந்தது என்னவென்றால், இந்த வயதிலும் நாடகத்தனத்தைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது. போய் பணம் சம்பாதியுங்கள், சற்று நிம்மதியை தேடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் பெண்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், நடிகை திரிஷாவின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது உதயநிதியின் பேச்சுக்கு எதிர்வினையா என்றும் கேள்விகள் எழுகின்றன.

அடுத்த பதிவில், நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும், எனவே முடிந்தவரை நல்லதையே செய்யுங்கள். நல்லவராகவே இருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு யாருக்கான அறிவுரை. அவரது தனிப்பட்ட வாழ்வில், அவருக்கு மட்டுமே தெரிந்தவர்களுக்கான அறிவுரையா, பொது வெளியில் இருப்பவர்களுக்கான அறிவுரையா, இல்லை எல்லோருக்குமான அறிவுரையா என்ற எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன.

த்ரிஷாவின் இதுபோன்ற பதிவுகள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருப்பதால் பலரும் அவர்களுக்குத் தோன்றிய கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Summary

Did Trisha break her silence on Udhayanidhi's remarks? She posts that she feels uncomfortable.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.